Last Updated : 22 Aug, 2017 04:56 PM

 

Published : 22 Aug 2017 04:56 PM
Last Updated : 22 Aug 2017 04:56 PM

அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் பல தியாகங்களைச் செய்துள்ளது: ட்ரம்ப் எச்சரிக்கைக்கு சீனா பதில்

தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா குரல் கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெற்காசிய நாடுகளுடான அமெரிக்காவின் உறவு குறித்து பேசும் போது, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தால் அந்த நாடு கடும் விளைவுகளை சந்திக்கும்“ என்று டர்ம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் ஹுவா சுயிங் பாகிஸ்தான் மீதான ட்ரம்பின் கருத்து குறித்து கூறும்போது, "அமெரிக்காவின் கொள்கைகள் தெற்காசிய பிராந்தியந்தில் பாதுகாப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் முன்னணியில் பாகிஸ்தான் உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் பல தியாகங்களையும் செய்துள்ளது.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து சண்டையிட வேண்டும். ட்ரம்பின் நிர்வாகம் தெற்காசியவில் அமைதியை கொண்டு வர முயற்சிக்கும் என்று நம்புகிறோம்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உறவை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையான உறவு உறுதியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

எதிர்மறையான பார்வை

டோக்லாம்மில் இந்தியாவின் நகர்வு  அந்நாட்டின் மீதுஎதிர்மறையான பார்வையை சீன மக்களிடம் உருவாகியுள்ளது.

டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைப்பதை இந்தியா தடுக்கு நடவடிக்கையும் ஹூவா குற்றச்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x