Published : 30 Aug 2017 09:56 AM
Last Updated : 30 Aug 2017 09:56 AM

சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்: ஐ.நா. சபை வேண்டுகோள்

சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐ.நா. பொது சபையின் தலைவராக ஸ்லோவேகியா நாட்டின் வெளியுறவு அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் கடந்த மே 31-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். வரும் 12-ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். அண்மையில் அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

இந்திய பயணத்துக்குப் பிறகு மிரோஸ்லாவ் லாஜ்காக், நியூயார்க்கில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். மனித உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று ஐ.நா. சபை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஐ.நா.வின் வளர்ச்சிக்கு இந்தியா அளப்பரிய பங்களிப்பை அளித்து வருகிறது. அதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதம், வறுமை என உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன. இதுபோன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x