Published : 24 Aug 2017 01:25 PM
Last Updated : 24 Aug 2017 01:25 PM

தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது பங்களிப்பை ட்ரம்ப் அவமதித்துவிட்டார்: பாகிஸ்தான்

தீவிரவாதத்துக்கு எதிரான எங்களது பங்களிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவமதித்துவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்தின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குகிறது என்ற ட்ரம்பின் கருத்தை பாகிஸ்தான் மறுத்ததுடன் தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் பங்களிப்பை ட்ரம்ப் அவமதித்துவிட்டார் என்று கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “ட்ரம்பின் கருத்தை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் பங்களிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவமதித்துவிட்டார்” என்றார்.

ட்ரம்பின் பேச்சு தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாதிகளை எதிர் கொள்ள பாகிஸ்தான் செய்தது போல எந்த நாடும் செய்தது இல்லை. அதே போன்று உலகில் எந்த நாடும் பாகிஸ்தானை போன்று பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டது இல்லை. தீவிரவாதத்தை எதிர்க்க பாகிஸ்தான் செய்த தியாகங்களை அமெரிக்கா அவமதிப்பு செய்துவிட்டது.

எனினும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து சண்டையிடும். தீவிரவாதம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உள்ள பொதுவான அச்சுறுத்தல். தீவிரவாதத்தை அழிக்க அமெரிக்கா பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x