

பொருளாதாரத்தில் சிரியா தள்ளாட, 2001 மார்ச்சில் அரசுக்கு எதிராக சுவரில் ஓவியங்கள் வரைந்தனர் சில குழந்தைகள். அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. பொருளா தாரத்தை மேம்படுத்த அல்ல. மேற்படி குழந்தைகளைக் கொன்றது. மக்கள் கொந்தளித்தார் கள். தொடங்கியது உள்நாட்டுப் போர். வெளிநாடுகளிலிருந்தும் சில ஜிகாதிகள் சிரியாவுக்கு வந்து சேர்ந்தார்கள். ஐ.எஸ். அமைப்பு சிரியாவில் அழுத்தமாகக் கால் பதித்தது.
ஐ.எஸ்.தீவிரவாதிகளை அடக்குவதற்கு முயற்சி எடுக்கி றேன் என்று பொறுப்பற்ற முறையில் அரசு நாட்டின் பல பகுதிகளிலும் குண்டு வீசிக் கொண்டி ருக்கிறது. இதனால் தீவிரவாதி களைவிட அப்பாவிப் பொதுமக்கள் தான் அதிகமாக இறந்து கொண் டிருக்கிறார்கள். தப்பிப் பிழைத்த மக்கள் அண்டை நாடுகளான லெபனான், துருக்கி, ஜோர்டான், எகிப்து, இராக் போன்ற நாடுக ளுக்கு தெறித்து ஓடிக் கொண்டிருக் கிறார்கள்.
சிரியா அரசை இப்போது மிகவும் வெறுப்பேற்றும் மற்றும் கவலைப்பட வைக்கும் விஷயம் இதுதான். இப்போது ஐ.எஸ். இயக்கத்திலுள்ள பலரும் நேற்று அரசின் ராணுவத்தில் பதவி வகித்த வர்கள். உள் விஷயங்களை நன்கு தெரிந்தவர்கள்.
ஜூலை 18 அன்று வெடிக்கப் பட்ட ஒரு குண்டு அஸாத் அரசை நிலைகுலைய வைத்திருக்கிறது. அரசின் மூத்த அமைச்சர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் கூடி யிருந்தனர். அந்த சந்திப்பு நிகழ்ந்தது தலைநகர் டமாஸ் கஸில் இருந்த தேசிய பாதுகாப்பு தலைமையகத்தில். அதாவது உச்சகட்ட பாதுகாப்பான இடத்தில். அங்கு வீசப்பட்ட குண்டு பாதுகாப்பு அமைச்சரைக் கொன்றது. கூடவே அஸாதின் மைத்துனரை யும் கொன்றது. அஸாதின் வலது கை என்று கருதப்பட்ட இவர், அரசின் சக்தி படைத்த உறுப்பினராகவும் விளங்கியவர்.
ஆகஸ்ட் 6 அன்று விழுந்தது அடுத்த இடி. இது குண்டினால் உருவானது அல்ல. முதுகில் குத்தப்பட்டதால் ஏற்பட்ட வலி. சிரியாவின் பிரதமர் ரியாத் ஹிஜாப் என்பவரும் வேறு இரண்டு அமைச்சர்களும் ஜோர்டானுக்குச் சென்றார்கள். அங்கு ‘நாங்கள் இனி எதிர்க்கட்சிக்கு ஆதரவாகத்தான் இருப்போம்’ என்று உரத்துக் கூறினார்கள்.
கி.மு. 1500-ல் எகிப்தின் வசமானது பண்டைய சிரியா. பிறகு பலரின் கைமாறி அலெக் ஸாண்டரின் பிடிக்குள் வந்து சேர்ந்தது. நாளடைவில் ரோம சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதியாக ஆனது. கி.பி. 636-ல் அரேபியர்கள் இப்பகுதியை வென்று தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். அப்போது இது ஒரு மாபெரும் வணிகக் கேந்திரமாக உருவானது.
ஏழாம் நூற்றாண்டில் இதனை ஆண்ட ஆட்சியாளர்கள் தங்கள் மொத்த சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக டமாஸ்கஸைத்தான் கொண்டிருந்தனர்.
அப்போது சிரியா நான்கு பிரம்மாண்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்ததது. அவை டமாஸ்கஸ், ஹோம்ஸ், பாலஸ் தீனம் மற்றும் ஜோர்டான். (ஆம் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யம்). இந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் ஸ்பெயினிலிருந்து படர்ந்தது. ஆனால் காலப்போக்கில் டமாஸ் கஸ் மதிப்பிழந்தது. சாம்ராஜ்யத் தலைநகர் பாக்தாத் (தற்போதைய இராக்கின் தலைநகர்) என்றானது.
1916-ல் ஆங்கிலேயர்களுக் கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற ரகசிய உடன்படிக்கையின்படி பிரான்ஸின் வசம் வந்து சேர்ந்தது சிரியா. நாளடைவில் லீக் ஆஃப் நேஷன்ஸ் (அந்த நாளைய ஐ.நா.சபை) அமைப்பும் பிரான்ஸுக்கு அந்த உரிமையை அளித்தது.
சுதந்திரப் போராட்டங்கள் நடை பெற்ற 1944 ஜனவரி 1 அன்று சிரியாவை சுதந்திரக் குடியரசாக ஏற்றுக் கொண்டது பிரான்ஸ். என்றாலும் தனது படைகளை ஏப்ரல்1946-ல்தான் சிரியாவி லிருந்து விலக்கிக் கொண்டது பிரான்ஸ். எனவே அப்போதுதான் சிரியாவில் சுதந்திர அரசை அமைக்க முடிந்தது.
பிரான்ஸ் நாட்டின் பிடியிலி ருந்த சிரியா 1944 புத்தாண்டு தொடக்கத்தில் சுதந்திரம் பெற்றது. இன்று அந்த சுதந்திரம் சீரழிந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களில் கணிசமானவர்கள் பிற நாடுகளுக்குச் செல்கிறார்கள் என்பது ஒருபுறம் இருக்க, அவர் களில் சிலர் எடுத்துள்ள முடிவு புருவங்களை உயர்த்த வைக்கிறது.