Published : 28 Aug 2017 05:55 PM
Last Updated : 28 Aug 2017 05:55 PM
இராக் தலை நகர் பாக்தாத்தில் சந்தைப் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், "பாக்தாத்திலுள்ள ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தக் குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT