ஈக்வெடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6 ரிக்டர் ஆக பதிவு

ஈக்வெடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6 ரிக்டர் ஆக பதிவு
Updated on
1 min read

தென் அமெரிக்க நாடான ஈக்வெடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் துறை தரப்பில், "ஈக்வெடாரின் கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 7 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதறி அடித்துக் கொண்டு சாலைக்கு ஓடி வந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று ஈக்வெடார் அரசு தெரிவித்துள்ளது.

ஈக்வெடாரில் கடந்த 2016-ம் ஆண்டு ரிக்டர் அளவுகோலில் 7.8-ஆக பதிவான நில நடுக்கத்துக்கு 700 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in