Published : 01 Jul 2017 05:06 PM
Last Updated : 01 Jul 2017 05:06 PM

2 இந்திய அமெரிக்கர்களுக்கு சிறந்த குடியேற்றவாசிகள் விருது

அமெரிக்காவின் 'சிறந்த குடியேற்றவாசிகள்' விருதுக்கு 2 இந்திய வம்சாவளியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சுதந்திர தினத்தையொட்டி நியூயார்க்கை சேர்ந்த கார்னகி கார்பரேசன் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் 'சிறந்த குடியேற்றவாசிகள்' விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 38 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சாந்தனு நாராயண் (54), விவேக் மூர்த்தி (39) ஆகியோரும் அடங்குவர்.

சாந்தனு நாராயண், அடோபி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். விவேக் மூர்த்தி, அமெரிக்க பொது சுகாதாரத் துறையின் முன்னாள் தலைவர் ஆவார். இவரது பெற்றோர் கர்நாடகாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள்.

கார்னகி கார்பரேசன் சார்பில் வரும் 4-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x