Published : 06 Jul 2017 04:06 PM
Last Updated : 06 Jul 2017 04:06 PM
ஜப்பானில் தென் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் மாயமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம், "ஜப்பான் தென் பகுதியில் பெய்ந்து வரும் கனமழைக்கு ஃப்யூகூவோகா நகரில் மட்டும் 15 பேர் மாயமாகியுள்ளனர்.
மேலும் வரும் நாட்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் மக்கள் அனைவரும் தாழ்வான பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன" என்று கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT