Published : 22 Nov 2014 11:10 AM
Last Updated : 22 Nov 2014 11:10 AM
பிரசவத்தின் உச்சபட்ச வலி எப்படி இருக்கும் என்பதை ஆண்களுக்கு வார்த்தைகளால் உணர்த்தி விட முடியாது. எனவே, அந்த வலியை உணர்வதற்காக சீன மருத்துவமனையில் கருவிகளின் உதவியுடன் ஆண்களுக்கு பிரசவ வலி ஏற்படுத்தப்படுகிறது.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் அய்மா மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு, ஆண்களுக்கு பிரசவ வலியை உணரச் செய்வதற்காக வாரம் இருமுறை வகுப்புகள் நடைபெறுகின்றன.
பிரசவ வலியை அனுபவிக்க ஒப்புக் கொண்ட ஆண்களுக்கு, அடிவயிற்றில் உபகரணங்கள் சில பொருத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் மின் அதிர்ச்சி ஏற்படுத்தி வலி உண்டாக்கப்படுகிறது. இதில் 5 நிமிடங்களுக்கு தாங்கவியலாத வலி ஏற்படுத்தப்படுகிறது.
செவிலியர் ஒருவர், கொஞ்சம் கொஞ்சமாக வலியின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்கிறார். இவ்வாறு ஒன்று முதல் 10 அலகுகள் வரை வலி அதிகரிக்கப்படுகிறது. சிலர் மூன்று அல்லது நான்கு அலகு எட்டியவுடன் நிறுத்தச் சொல்லி விடுகின்றனர். பெரும் பாலானவர்கள் சில நிமிடங்க ளிலேயே வலியைத் தாங்காமல், வெளியேறி விடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT