Last Updated : 27 Nov, 2014 09:55 AM

 

Published : 27 Nov 2014 09:55 AM
Last Updated : 27 Nov 2014 09:55 AM

தன் பாலின சேர்க்கையாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொலை

சிரியாவில் தன் பாலின சேர்க்கையாளர்கள் என அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளின் உத்தரவின்படி அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டெரி அல் சூர் நகரை சேர்ந்த 20 வயதான அந்த இளைஞர் மற்றொரு ஆணுடன் பாலின சேர்க்கையில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோவை தனது செல்போனில் வைத்திருந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்தனர். அவரை தெருவில் நிற்கவைத்து பொது மக்களை கற்களை வீச செய்து கொலை செய்தனர். அதே நகரில் மற்றொரு தெருவிலும் இதே போன்று மற்றொரு இளைஞர் கொல்லப்பட்டார். இருவரது உடல்களையும் தீவிரவாதி கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

முன்னதாக பொருட்களில் கலப்படம் செய்த வியாபாரிக்கு கடந்த அக்டோபர் மாதம் இதே போன்ற கல்லால் அடித்து கொல்லும் தண்டனையை ஐஎஸ் தீவிரவாதிகள் நிறைவேற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x