Published : 11 Jul 2017 10:11 AM
Last Updated : 11 Jul 2017 10:11 AM
பூடானுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டால், அதே பாணியில் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டால் மூன்றாம் நாட்டு ராணுவம் காஷ்மீருக்குள் நுழைய முடியும் என்று சீன ஊடகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் சைனா வெஸ்ட் நார்மல் யுனிவர்சிட்டியின் இந்திய படிப்புகள் மைய இயக்குநர் லாங் ஜிங்சும் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
பூடானுக்கு உதவுவதாகக் கூறி சீனாவின் டோக்லாம் பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவி உள்ளது. ஒருவேளை தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பூடான் கேட்டுக் கொண்டிருந்தாலும், இந்தியா தனது நாட்டுக்கு சொந்தமான பகுதிக்குள் இருந்தபடிதான் அந்தப் பணியைச் செய்ய வேண்டும். அதைவிடுத்து சர்ச்சைக்குரிய பகுதியில் ஊடுருவி இருக்கக்கூடாது.
எனவே அந்தப் பகுதியிலி ருந்து இந்திய ராணுவம் பின்வாங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவின் பாணியில், பாகிஸ் தான் அரசு கேட்டுக்கொண்டால் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதி உட்பட சர்ச்சைக் குரிய பகுதிக்குள் மூன்றாம் நாட்டு ராணுவம் நுழைய முடியும்.
ஒரு நாட்டின் உள் விவகாரங் களில் மற்ற நாடுகள் தலையிடக் கூடாது என இந்தியா நீண்டகால மாக கூறி வருகிறது. ஆனால், அந்த நாடே இப்போது பிற நாட்டு விவகாரத்தில் தலையிடுகிறது. இது சர்வதேச உறவை சீர்குலைப் பதாகவும் ஐ.நா. விதிமுறையை மீறுவதாகவும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா, சீனா இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளும் ராணுவத்தை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT