Published : 19 Aug 2016 09:00 AM
Last Updated : 19 Aug 2016 09:00 AM

தெற்கு சூடானில் 300 பேர் மீட்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்ட தெற்கு சூடானில் இருந்து 300 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நடவடிக்கையை அமெரிக்கா பாராட்டியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தெற்கு சூடானில் போர்முனையில் 300 இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் நேரடியாக தெற்கு சூடானுக்கு சென்று 300 இந்தியர்களையும் மீட்டு விமானப்படை விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வந்தார். அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட சி-17 குளோப்மாஸ் டர் விமானம் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து அமெரிக்க விமா னப்படை செயலாளர் தெபராள் லீ ஜேம்ஸ், வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறிய தாவது: சி-17 விமானம் மூலம் தெற்கு சூடானில் இருந்து இந்தியர்கள் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை யில் இந்திய விமானப்படை மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதற்காக இந்திய அரசுக்கும் விமானப் படைக்கும் பாராட்டு களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் கடந்த மே மாதம் நடந்த அமெரிக்க, இந்திய போர் பயிற்சியில் இந்திய விமா னப்படை மிகச் சிறப்பாக செயல் பட்டது. உலகின் மிகச் சிறந்த விமானப் படையை கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. பாதுகாப்புத் துறையில் அமெரிக் காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும். உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது இரு நாடுகளும் இணைந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எப் 16 போர் விமானம்

அமெரிக்க விமானப்படை செயலாளர் தெபராள் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். அவ ரது பயணத்தின்போது, ‘இந்தியா வில் தயாரிப்போம்’ திட்டத்தில் எப்16 ரக போர் விமானத்தை இரு நாடுகளும் இணைந்து தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x