Last Updated : 06 Sep, 2016 06:20 PM

 

Published : 06 Sep 2016 06:20 PM
Last Updated : 06 Sep 2016 06:20 PM

ஸ்டெம் செல் ஊழல் குற்றச்சாட்டால் நோபல் தேர்வு குழுவிலிருந்து இருவர் நீக்கம்

ஸ்டெம் செல் ஊழல் குற்றச்சாட்டால் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களை தேர்தெடுக்கும் தேர்வு குழுவிலிருந்து இருவரை நீக்குவதாக நோபல் பரிசு குழு அறிவித்துள்ளது.

நீக்கம் செய்யப்பட்ட ஹாரியட் வால்பெர்க், ஆண்டெர்ஸ் ஹம்ஸ்டின் இருவரும் ஸ்வீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா மருத்துவ பல்கலைகழகத்தை சேர்ந்தவர்கள்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நோபல் அமைப்பு குழுவின் செயலாளர் தாமஸ் பெர்ல்மன் ஸ்விடன் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது,

"ஹாரியட் வால்பெர்க், ஆண்டெர்ஸ் ஹம்ஸ்டின் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் இருவரையும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களை தேர்தெடுக்கும் தேர்வு குழுவிலிருந்து விலகுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

ஹாரியட் வால்பெர்க், ஆண்டெர்ஸ் ஹம்ஸ்டின் இருவரும் ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா பல்கலைகழகத்திலிருந்து இந்த ஊழல் குற்றச்சாட்டால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x