Published : 20 Jan 2014 10:49 AM
Last Updated : 20 Jan 2014 10:49 AM

காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

காஸா கரை பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் ஒரே இரவில் இரு முறை தாக்குதல் நடத்தின. தெற்கு இஸ்ரேல் பகுதி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மற்றும் மத்திய காஸா கரை பகுதியில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் இரு இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்கு தல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இத் தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இதே போன்றதொரு தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதில், காஸாவில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் காயமடைந்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x