Last Updated : 25 Mar, 2017 03:47 PM

 

Published : 25 Mar 2017 03:47 PM
Last Updated : 25 Mar 2017 03:47 PM

சிரிய சிறைச்சாலை மீது வான்வழித் தாக்குதல்: 16 பேர் பலி

சிரிய சிறைச்சாலையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சிரிய மனித உரிமை ஆணையம் தரப்பில், சிரியாவின் வடக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இட்லிப் பகுதியின் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 16 பேர் பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் கைதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் ஆவர்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் வான்வழித் தாக்குதலை யார் நடத்தியது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக சிரிய தலைநகர் டமாஸ்கஸ், இட்லிப் போன்ற பகுதிகளில் அரசு மற்றும் கிளர்ச்சிப் படைகளுக்கு இடையில் கடந்த 10 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது.

கிளர்ச்சியாளர்கள் பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்த சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அரசு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x