Published : 23 Mar 2017 02:49 PM
Last Updated : 23 Mar 2017 02:49 PM
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க போலீஸ் தரப்பில், "அமெரிக்காவின் வடக்கு பகுதியிலுள்ள விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று மாலை 5 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் துப்பாக்கிச் சூடு குறித்து விரிவான தகவலை அளிக்க போலீஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT