Published : 03 Mar 2017 02:56 PM
Last Updated : 03 Mar 2017 02:56 PM
அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இந்திய பொறியாளர் இனவெறி தூண்டுதலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் மறைவதற்குள்ளாகவே இந்தியா வம்சாவெளிப் பெண் ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
நியூயார்க்கில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் ஏக்தா தேசாய். அவர் கடந்த ஃபிப்ரவரி 23-ம் தேதி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக பயணியான ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவர், இனரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த ஏக்தா, அதைச் சமூக ஊடகத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் ''ஆப்பிரிக்க மனிதர், 'பேச்சுரிமை', 'கருப்பினத்தின் அதிகாரம்' முதலான அர்த்தம் தொனிக்கும் வார்த்தைகளைக் கூறுகிறார். சில அடைமொழிகளைப் பயன்படுத்தியவர், 'இங்கிருந்து வெளியேறு' '' என்றும் கூறுகிறார்.
அந்தப்பெண் வீடியோ எடுப்பதை அறிந்த ஆப்பிரிக்கர், கோபமடைந்து கத்த ஆரம்பிக்கிறார்.
'த வாய்ஸ் ரெய்ஸர்' என்னும் இணையதளத்தால் அந்த வீடியோ பகிரப்பட்டு, பின்னர் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக, ஏக்தா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT