பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 10 போலீஸார் பலி

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 10 போலீஸார் பலி
Updated on
1 min read

கராச்சி, ஷா லடிஃப் டவுன் பகுதியில் ரசாக்காபாத் போலீஸ் பயிற்சி மையம் உள்ளது. இங்கிருந்து 50க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று பூட்டோ குடும்பத்துக்கு சொந்தமான பிலாவல் இல்லத்துக்கு பாதுகாப்பு பணிக்கு பஸ்ஸில் புறப்பட்டனர்.

இந்நிலையில் பயிற்சி மைய வளாகத்தில் இருந்து இவர்களின் பஸ் வெளியேறும்போது, வெடி பொருள் நிரப்பிய வாகனத்தில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் பஸ் மீது மோதி வெடிபொருள்களை வெடிக்கச் செய்தார்.குண்டுவெடிப்பில் 10 போலீஸார் இறந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். இதுதவிர பொதுமக்கள் சிலரும் காயமுற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in