

சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியது.
கொலம்பிக் நகரில் இருந்து 65 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். கடந்த 2010- ஆம் ஆண்டு 8.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் அதனைத் தொடர்ந்து தாக்கிய சுனாமியாலும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்தனர்.