Published : 10 Sep 2016 02:25 PM
Last Updated : 10 Sep 2016 02:25 PM
வங்க தேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகினர். 70 பேர் காயமடைந்தனர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் வடக்குப் பகுதியில் பேகேஜிங் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை காலை 6.15 மணியளவில் கொதிகலன் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தொழிற்சாலையில் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் பேக்கேஜிங் செய்து வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் 15 பேர் இறந்ததாகவும், 70 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் டாக்கா மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் பல பகுதிகள் தீக்கிரையாகின. தீ விபத்து ஏற்பட்டபோது 100 தொழிலாளர்கள் பணயில் இருந்ததாகத் தெரிகிறது. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT