Published : 12 May 2017 09:19 AM
Last Updated : 12 May 2017 09:19 AM
தென்கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
தென்கொரிய அதிபர் தேர்த லில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூன் ஜே-இன் வெற்றி பெற்று நேற்று முன்தினம் அதிபராக பதவியேற்றார். வடகொரியாவின் அணுஆயுத திட்டத்தால் கொரிய தீபகற்பத்தில் தற்போது போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் நேற்று தொலைபேசியில் 40 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இதேபோல ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடனும் மூன் ஜே-இன் தொலைபேசியில் பேசினார். ஜப்பானுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
வடகொரியாவுக்கு அரசு முறை பயணம் செல்ல தயாராக இருப்பதாக மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது எழுந்துள்ள பதற்றத்தை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க புதிய அதிபர் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT