Last Updated : 12 Nov, 2014 09:43 AM

 

Published : 12 Nov 2014 09:43 AM
Last Updated : 12 Nov 2014 09:43 AM

பாகிஸ்தானில் சாலை விபத்து: 56 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லாரியும் – பஸ்ஸும் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 குழந்தைகள், 21 பெண்கள் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

வடமேற்கு பாகிஸ்தான் கைபர் – பக்துன்கவா மாகாணத்தில் இருந்து தெற்கில் உள்ள கராச்சி நோக்கி பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சிந்து மாகாணத்தின் சுக்குர் மாவட்டம் தேரி புறவழிச் சாலை அருகே இந்த பஸ், லாரியுடன் மோதியது. இந்த விபத்தில் 56 பேர் இறந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

காயமடைந்த 15 பேர் சுக்குர் மற்றும் கேர்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓட்டுநரின் கவனக்குறைவே இதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறினர்.

பஸ் டிரைவர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரில் வந்த லாரி மீது மோதியதாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் நிரப்பிய பின், சாலையில் பஸ் ஏறும்போது, வேகமாக வந்த லாரி மோதியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x