Published : 25 Jan 2017 09:20 AM
Last Updated : 25 Jan 2017 09:20 AM

ஆண்ட்ராய்ட் செல்போனை கைவிட்ட டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக தனக்கு மிகவும் விருப்பமான ஆண்ட்ராய்ட் செல்போனை அவர் கைவிட்டுள்ளார். அதற்குப் பதிலாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய செல்போனை ட்ரம்புக்கு உளவுத் துறையினர் அளித்துள்ளனர்.

அந்த செல்போனில் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியாது. பாடல், இசையை கேட்க முடியாது. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே பேச முடியும்.

அதிபரின் செல்போன் உரையாடல்களை யாரும் இடை மறித்து கேட்கக்கூடாது, அவரது இ-மெயில் தகவல்களை யாரும் ஹேக்கிங் செய்துவிடக்கூடாது என்பதற்காக ட்ரம்புக்கு புதிய செல்போன் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் இதேபோன்ற செல்போனையே பயன்படுத்தினார். இதுகுறித்து ஒபாமா ஒருமுறை கூறியபோது, எனது செல்போனை வைத்து எதுவுமே செய்ய முடியாது. அதை ஒரு விளையாட்டு பொம்மையாகவே பாவிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறியபோது, அதிபராக பொறுப்பேற்ற பிறகு எனது ஆண்ட்ராய்ட் செல்போனை பயன்படுத்த முடியாது. அந்த செல்போன் இல்லையென்றால் நான் மிகுந்த தனிமையாக உணர்வேன் என்று தெரிவித்தார்.

ட்ரம்பிடம் வழங்கப்பட்டிருப் பது எந்த நிறுவனத்தின் செல்போன், அதில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x