Last Updated : 06 Nov, 2014 05:52 PM

 

Published : 06 Nov 2014 05:52 PM
Last Updated : 06 Nov 2014 05:52 PM

மூன்று நாட்களில் 17 பேர் தலையைக் கொய்து படுகொலை செய்தது ஐ.எஸ்.

சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கடந்த 3 நாட்களில் 17 பேரை தலையை வெட்டி படுகொலை செய்ததாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளுக்கும் குர்து படைகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. சிரியாவின் கொபேனி உள்ளிட்ட நகரங்களை தாக்குதல் நடத்தி ஐ.எஸ். கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில் அந்த அமைப்பு கடந்த 3 நாட்களில் மட்டும் 17 சிரியா நாட்டவரை தலையை வெட்டி அல்லது சிலுவையில் அறைந்து படுகொலைகளை செய்துள்ளதாக சிரியாவில் போர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் சர்வதேச அமைப்பு தெரிவித்ததாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது சிரியாவின் தயர்-அல்-சவூரியின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி இராக் எல்லைக்கு நெருங்கி உள்ளனர். இந்த பகுதிகளிலும் சிரியாவின் அல்-ரக்கா பகுதிகளிலும் இருக்கும் மக்களை அவர்கள் அச்சுறுத்தி தங்களது கட்டளைகளை நிறைவேற்றும்படியும் அறிவுறுத்துகின்றதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x