Published : 13 Nov 2014 03:38 PM
Last Updated : 13 Nov 2014 03:38 PM
மதம் சார்ந்த பயங்கரவாதத்திற்கு உலக நாடுகள் அனுமதி அளிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மியன்மார் தலைநகர் நேபிடாவில் நடைபெறும் கிழக்கு ஆசியப் பிராந்திய உச்சி மாநாட்டில் பேசிய மோடி, "பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகளுடன் இணைந்து போராட வேண்டும்.
அப்போது, மதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையேயான இணைப்பை புறந்தள்ளிவிட்டு பயங்கரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவது போன்ற சட்டவிரோத செயல்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பயங்கரவாதத்தினால் ஏற்படும் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதைத் திறம்பட சமாளிக்க வேண்டும்" இவ்வாறு பிரதமர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT