Published : 17 Nov 2014 10:35 AM
Last Updated : 17 Nov 2014 10:35 AM
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து திங்கள்கிழமை காலை சிட்னி நகருக்குச் சென்றடைந்தார்.
அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் (அபாரிஜின்கள்) பாரம்பரிய நடனமாடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். மேலும், அவருக்கு பூமராங் எனப்படும் கருவியும் பரிசாக அளிக்கப்பட்டது. பூமராங் எனும் கருவி வேட்டையாடுவதற்காக ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாகும்.
சிட்னி நகரில் அல்போன்ஸ் ஒலிம்பிக் பூங்காவில் மோடி உரையாற்றுகிறார். அவரது பேச்சைக் கேட்க இந்தியர்கள் 16,000 பேர் கூடுகின்றனர்.
மோடி பேச்சைக் கேட்க மெல்போர்ன் நகரில் இருந்து 200 இந்தியர்கள் 'மோடி எக்ஸ்பிரஸ்' என்று பெயரிடப்பட்ட ரயிலில் சிட்னி புறப்பட்டுச் சென்றனர்.
1986-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆஸ்திரேலியா சென்றார். அதன்பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஆஸ்திரேலியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT