Published : 04 Dec 2015 03:38 PM
Last Updated : 04 Dec 2015 03:38 PM
சென்னை மழை வெள்ளம் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டியதை உணர்த்தியிருப்பதாக பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் லாரண்ட் பேபியஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை வெளியுறவு அமைச்சர் ஏற்று தலைமை தாங்கி வருகிறார்.
அவர் கூறும்போது, "சென்னையில் அண்மையில் பெய்துள்ள வரலாறு காணாத மழையும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளமும் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாகும். சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரான்ஸ் துணை நிற்கிறது" எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை மழையை பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது இயற்கைப் பேரழிவு எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT