Last Updated : 22 Nov, 2014 11:35 AM

 

Published : 22 Nov 2014 11:35 AM
Last Updated : 22 Nov 2014 11:35 AM

கொலைதேசமா கொலம்பியா?

நாட்டின் ராணுவமும், செல்வந்தர்கள் தாங்களா கவே உருவாக்கிக் கொண்ட ‘குட்டிக் குட்டி ராணுவங் களும் இணைந்து செயல்பட்டன. தீவிரவாதக் குழுக்களை ஆதரிப்ப வர்களை இவர்கள் கொலை செய்யத் தொடங்கினர். வருங் காலத்துக்கு நல்லதில்லையா?! வேதனை என்னவென்றால் இவர்கள் தங்கள் நிதிக்கு முக்கிய மாக நம்பியது போதை மருந்துக் கடத்தல் வியாபாரிகளைத்தான். இதில்தான் நாம் முன்பு குறிப்பிட்ட பாப்லோ எஸ்கோபாரும் இணைந்து கொண்டார்.

1983-ல் அரசு போதைப் பொருள் வணிகத்துக்கு எதிராக பலத்த பிரச்சாரம் செய்த துடன் கடுமையான நடவடிக்கைக ளையும் எடுத்தது. கூடவே அமைதி ஒப்பந்தத்திலும் ஈடுபட்டது.

பிடி இறுகுவதைக் கண்ட போதைப் பொருள் வியாபாரிகள் ‘’எங்கள் பணத்தை தேசிய முன் னேற்றத் திட்டங்களில் முதலீடு செய்கிறோம். கொலம்பியாவின் முழு வெளிநாட்டுக் கடனையும் நாங்கள் அடைக்கிறோம்’’ என்றெல் லாம் ஆசை காட்டினார்கள். இதற்குப் பிரதி பலனாக அவர்கள் கேட்டது தங்களுக்குத் தண்டனை தரக்கூடாது என்றும் தங்கள் போதை வியாபாரத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும்தான்.

அரசு இதை மறுத்து விட்டது. எனவே மீண்டும் பெரும் கலவரங் கள் வெடித்தன.

இதனால் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டது. கொலம்பியா வின் பெரும்பாலான போதைப் பொருட்கள் அமெரிக்க நகரங்க ளுக்குதான் கடத்தப்பட்டுக் கொண் டிருந்தன. எனவே கொலம்பிய அரசு ‘‘எங்கள் நாட்டிலிருந்து தப்பி உங்கள் நாட்டுக்கு வரும் மாஃபியா நபர்களை நீங்கள் எங்களிடம் ஒப்படைக்க வேண் டும்’’ என்று கேட்க, அமெரிக்கா ஒத்துக்கொள்ள, இதற்குரிய ஒப்படைப்பு ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது.

மேலும் கோபமடைந்த மாஃபியா ஆட்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த அரசியல் வாதிகளையெல்லாம் கொலை செய்யத் தொடங்கினார்கள். வங்கிகள், ஊடக அலுவலகங்கள் என்று பல இடங்களில் குண்டு வெடிப்பு. பொகோடாவிலிருந்து நவம்பர் 1989-ல் கிளம்பிய விமானம் ஒன்று குண்டு வெடித்துத் தகர்க்கப்பட்டது. அதிலிருந்த 107 பேரும் இறந்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனது என்ற நிலையையும் தாண்டியது.

1990-ல் லிபரல் கட்சியைச் சேர்ந்த சீஸர் கவீரியா ஆட்சிக்கு வந்ததும் நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. நாம் முன்பு குறிப்பிட்ட பிரபல போதைக் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் அரசிடம் சரணடைந்தான். ஆனால் பின்னர் தப்பித்து விட்டான். அவனைப் பிடிக்க 1500 பேர் அடங்கிய ஒரு தனிப் படையையே அரசு உருவாக்கிது. டிசம்பர் 1993-ல் மெடல்லின் என்ற நகரில் அவனை வளைத்துப் பிடித்துக் கொன்றது அந்த அணி.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக அரசு தன் பிடியை இறுக்க, இறுக்க எதிர்த் தரப்பு மேலும் உக்ர மானது. கொலம்பியாவில் குண்டு வீச்சு, படுகொலை போன்றவை பரவலாயின. 1989-ல் அதிகபட்க கொலம்பியர்களின் இறப்பிற்கான முக்கியக் காரணம் படுகொலை என்று ஆனது.

1990-ல் கொலம்பியாவில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காவிரியா ட்ருஜில்லோ என்பவர் போதைக் கடத்தல் மன்னர்களுக்கு ‘‘சரண டையுங்கள். மிகக் குறைவான தண்டனையை வாங்கித் தருகி றேன்’’ என்று ஆசை காட்டினார்.

1994-1998 ஆண்டுகளில் ஆட்சி செய்த கொலம்பிய ஜனாதிபதி சாம்பர் மீது ஒரு கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தனது தேர்தல் பிரசாரத்திற்காக போதை மருந்து உலக தாதாக்களிடமிருந்து அவர் நிதி பெற்றார் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு.

முழுமையாக போதைப் பொருள் விளைச்சலையும் கடத் தலையும் ஒழிக்க வேண்டுமென்று சில அரசியல்வாதிகள் நினைத் தாலும் அவர்களுக்கு நிறைய நடைமுறைப் பிரச்னைகள். ‘‘சிறு அளவில் கோகெய்ன் மற்றும் மரிஜுவானைவை வைத்திருப்பது குற்றமல்ல’’ என்கிறது அந்த நாட்டுச் சட்டம்!.

அரசியலில் தாதாக்களின் பங்கு மக்களை வெறுப்படையச் செய்ய (தனக்கு வேண்டிய அரசியல்வாதி நடத்தும் பொதுக் கூட்டமென்றால் 100 பஸ், அவரது கட்சியின் பெயர் பொறித்த ஆயிரக்கணக்ககான டீ ஷர்ட்டுகள், பிரபல ஹோட்டலில் வி.ஐ.பி.க்களுக்கு விருந்து என்று தாதாக்கள் தூள் கிளப்புவார்களாம்). அமெரிக்கா வும் இந்தப் போக்குக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தச் சூழலில் குற்றம் சாட்டப் பட்ட ஜனாதிபதியே களத்தில் சுறு சுறுப்பாக ஈடுபடத் தொடங்கினார். ‘‘ப்ராஸிக்யூட்டர் ஜெனரல்’ என்ற ஒரு புதிய பதவி உருவாக்கப் பட்டது. இந்தப் பதவியை வகிப்ப வரின் ஒரே வேலை போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்து வதுதான். மிகுந்த சிரமங்களுக் கிடையே ‘காளி கார்ட்டல்’ என்ற பிரபல போதை மருந்து மாபியா கும்பலைச் சேர்ந்த சில தாதாக் களை அவர் சிறையில் தள்ளினார்.

‘‘தண்டனையைவிட மன மாற்றமே சிறந்த வழி’’ என்ற புதிய சித்தாந்தத்தை அருளிய ப்ராஸிக்யூட்டர் ஜெனரல் பலவித சலுகைகளை தாதாக்களுக்கு அள்ளி வீசினார். ‘‘குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடையுங்கள். மூன்றே வருட சிறைத் தண்டனை யோடு நிச்சயம் அரசு உங்களை விடுவித்து விடும்’’ என்றெல்லாம் இவர் கெஞ்சுவதை யும், இதற்கும் பலனில்லாமல் போவதையும் கண்டு திகைத்துப் போனார்கள் கொலம்பிய மக்கள்.

1998-ல் நாட்டின் அதிபரான ஆன்ட்ரெஸ் பாஸ்ட்ரனா அரங்கோ என்பவர் போதைப் பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். நாடு ரத்தக்களறி ஆனது. 20 லட்சம் பேர் நாட்டை விட்டே வெளியேறினர். 2000-ல் அமெரிக்க அரசு கொலம்பிய அரசுக்குப் பெரும் நிதி உதவி அளித்தது. ‘பிளான் கொலம் பியா’ என்று இதற்குப் பெயர். போராட் டக்காரர்களை ஒடுக்க அதிகப்படி உரிமைகளை ராணுவத்திற்கு அளித்தது கொலம்பியா அரசு.

2002-ல் ஜனாதிபதியாக அல்வரோ உரிபேவும் தொடர்ந்து கடுமை காட்டினார். 2004-ல் மனித உரிமைகள் மிக மிக அதிகமாக மீறப்பட்டன. எனினும் பின்னர் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வரத் தொடங்கியது. 16,000 இடதுசாரி கெரில்லாக்கள் சரணடைந்தனர் (மற்றும் கொல்லப்பட்டனர்). பல லட்சம் ஏக்கர்களில் விளைந்த கோக்கோ தாவரங்கள் கொளுத்தப்பட்டன.

2006 தேர்தலிலும் உரிபே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். நாடு பொருளா தார வளர்ச்சிப்பாதையில் நடை போடத் தொடங்கியிருக்கிறது. ராணுவ வன்முறையும் குறைந்தி ருக்கிறது.

தீவிரவாத அமைப்புகள் அரசுடன் நீண்டகாலப் பேச்சு வார்த் தைகளை நடத்தியபின் தங்கள் பணயக் கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து வருகிறார்கள்.

2014 ஜூன் 15 அன்று நடைபெற்ற தேர்தலில் ஜுவான் மேனுவல் சான்ரோஸ் என்பவர் ஜனாதிபதி ஆகியிருக்கிறார்.

கொலம்பியாவில் அமைதி மெதுவாகத் திரும்பத் தொடங்கியி ருக்கிறது. போக வேண்டிய தூரம் அதிகம் என்றாலும் போக வேண்டிய திசையில் பயணம் செய்யத் தொடங்கியிருக்கிறது.

(அடுத்து.. நாடுகள் என்ற பெயரில் இரு ஜென்மப் பகைவர்கள்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x