Published : 07 Aug 2016 09:08 AM
Last Updated : 07 Aug 2016 09:08 AM
அமெரிக்கா தாக்கப்பட்டால் ஜப்பானியர்கள் தொலைக்காட்சி யில் வேடிக்கை பார்த்துக் கொண் டிருப்பார்கள் என்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட் டியுள்ளார்.
அயோவா மாகாணம், டெஸ் மோனீஸ் நகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசிய தாவது:
அமெரிக்காவும் ஜப்பானும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அதன்படி ஜப்பான் தாக்கப்பட்டால் அமெரிக்கா தனது முழு படைகளையும் பலத் தையும் பயன்படுத்தி அந்த நாட்டைப் பாதுகாக்கும். ஒருவேளை அமெரிக்கா தாக்கப் பட்டால் ஜப்பானியர்கள் அதை தொலைக் காட்சியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது என்ன ஒப்பந்தம்?
ஜப்பானில் தற்போது 47 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள் ளனர். அவர் களுக்கான செலவில் பாதியை மட்டுமே ஜப்பானிய அரசு ஏற்றுக் கொள்கிறது. முழுச் செலவையும் அந்த நாடு ஏற்றுக் கொள்ள செய்வது அவசியம்.
ஜப்பான் மட்டுமன்றி தென்கொ ரியா, ஜெர்மனி, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புக் கும் அமெரிக்கா உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் அந்த நாடுகள் அமெரிக்க படைகளுக் கான முழுச் செலவை ஏற்கவில் லை. இதனால் அமெரிக்கா ஏராளமான இழப் புகளைச் சந்திக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT