Last Updated : 14 Nov, 2014 10:10 AM

 

Published : 14 Nov 2014 10:10 AM
Last Updated : 14 Nov 2014 10:10 AM

ஹா ஹாங்காங் 4

உனக்கென்ன குறை? தனியாக உள்ளூர் அரசாங்கம் - அதுவும் எங்களுக்குச் சிறிதும் பிடிக்காத ஜனநாயகம். கட்டுப்பாடு இல்லாத ஊடகங்கள், உனக்கென உள்ள தனி கலாச்சாரம். இத்தனையை யும் கொடுத்த பிறகும் எதற்காக இன்னும் மூக்கால் அழுகிறாய்? என்கிறது சீனா.

ஆனால் ‘‘குறையொன்றும் இல்லை. ஜின்பிங் கண்ணா’’ என்று பாட ஹாங்காங் தயா ரில்லை. (ஜின்பிங் சீனாவின் தற்போதைய அதிபர்). இதற்குப் பல காரணங்கள்.

என்னதான் சீனாவின் ஒரு பகுதி யாக சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்தாலும், ஹாங்காங் கின் கலாச்சாரம் பலவிதங்களில் மாறிவிட்டது. பிரிட்டனின் ஆட்சி யில் ஹாங்காங் மக்கள் வேர்களில் இருந்து விலகி புதிய நடத்தைகளை வளர்த்துக் கொண்டு விட்டார்கள்.

முதலில் சமூக நடவடிக்கை களையே எடுத்துக் கொள்வோம். ஹாங்காங் மக்களுக்கு பொது இடங்களில் எச்சில் துப்புவது பிடிக்காது. சீனர்களுக்கோ (இந்தக் கட்டுரையில் சீனா என்றும் சீனர்கள் என்றும் குறிப்பிடும்போது ‘ஹாங்காங் நீங்கலான சீனா/சீனர்கள்’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்) பொது இடங்களில் எச்சில் துப்புவதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?’ என்ற எண்ணம். முக்கி யமாக படிப்பறிவில்லாத கிராமத்தினர் இது தங்கள் உரிமை என்பதுபோல் நடந்து கொள்கி றார்கள். ஹாங்காங் மக்களால் இதை ஏற்க முடியவில்லை.

சுரங்கப்பாதைகளில் சாப்பிட்டுக் கொண்டே நடப்பது. மிச்சத்தை அங்கேயே போடுவது என்பதெல்லாம் பல சீனர்களால் தவிர்க்க முடியாத, எந்தவொரு ஹாங்காங் குடிமகனாலும் ஒத்துக் கொள்ள முடியாத செயல்கள்.

அதுவும் சார்ஸ், பறவைக் காய்ச்சல் போன்றவற்றால் ஹாங்காங் பெருமளவில் பாதிக் கப்பட்ட பிறகு சுத்தம், சுகாதார விஷயங்களுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டது ஹாங்காங். படிப்பறிவில்லாத சீனர்களில் பலரும் மாலை நேரமாகிவிட்டால் போதும், தங்கள் வீட்டுக்கு முன் காகிதங்களை கொளுத்துவார்கள். பலரது வீடுகளில் தெருப்பக்கமாக உள்ள சுவர்களில் வண்ணக் காகிதங்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதெல்லாம் எதற்காக? பேய்களும், பிசாசுகளும் தங்களை நெருங்கா மல் இருப்பதற்குதான்.

சீனர்களுக்கு ஹாங்காங்வாசி கள் மீது மிகவும் பொறாமை. அவர்களில் சிலருக்கு ஹாங்காங் கிற்கு உள்ள தனித்துவமும் அதற்கு அளிக்கப்படும் சலுகைகளும் கண்ணை உறுத்துகிறது. ஹாங் காங்கை ‘நன்றி கெட்ட நாய்’ என்று திட்டுகிறார்கள். பதிலுக்கு ஹாங்காங் மக்கள் சீனர்களை ‘ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்’ என்று அனல் கக்குகிறார்கள்.

எதற்காக இந்த உயிரினங்கள் இவர்கள் வாயில் அரைபடுகின்றன? சீனாவின் ஒரு பகுதியாக இருந்தும் ஹாங்காங் பிரிட்டனிடம் விசுவாசமாக இருக்கிறது, மேலை நாட்டு பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறது என்பதால் ஹாங்காங் நாயுடன் ஒப்பிடப்படுகிறது.

சீனர்கள் என் அட்டையுடன் ஒப்பிடப்பட வேண்டும்? காரணம் உண்டு. சீனத்தில் கர்ப்பமடை யும் பெண்களில் கணிசமானவர் கள் ஏதாவது காரணத்தைக் கூறிக்கொண்டு பிரசவகாலத்தில் ஹாங்காங்கிற்கு வந்து விடுகிறார் கள். காரணம் ஹாங்காங்கில் நிறைய சுதந்திரமும், பொருளா தாரச் செழிப்பும் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களும் இருக்கின்றன. ஹாங்காங்கில் பிறப்பவர்களுக்கு இங்கே பல சலுகைகள் உண்டு என்பதால் இங்கு குழந்தை பிறந்தவுடன் அதைப் பதிவு செய்து கொண்டு மீண்டும் சீனா செல்லும் தாய் தன் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம் வந்தவுடன் ஹாங்காங்கிற்கு இடம் மாறுகிறார். தானும் சீனா வின் ஒரு பகுதி என்பதால் ஹாங்காங் கால் இதைத் தடுக்க முடியவில்லை.

தவிர சீனாவில் விற்கப்படும் பால் பவுடர் தரம் குறைந்தது என்ற சந்தேகம் பரவலாக இருப்பதால், ஹாங்காங்கிற்கு வரும் பெற்றோர் அங்கு பால் பவுடர் டின்களை எக்கச்சக்கமாக வாங்கிக் கொண்டு சீனாவிற்குத் திரும்புகிறார்கள். அடுத்ததாக ஹாங்காங்கின் நீதிமுறைச் செயல்பாட்டுக்கு வருவோம்.

சீனாவின் பிற பகுதிகளுக்கெல்லாம் ஒரு நீதித் துறை என்றால், ஹாங்காங்கிற்கு தனியானதொரு நீதித்துறை. 1997-க்குப் பிறகும்கூட ஹாங்காங் வாசிகளுக்குப் பல சட்ட உரிமைகளை அளிக்கும் வகையில் ஓர் அடிப்படை விதி (Basic law) உருவாக்கப்பட்டது.

ஹாங்காங் காவல் துறையின ருக்கு முழு சுதந்திரம் உண்டு. இதனாலும், அவர்களுக்கே உரிய திறமையாலும் சிறப்பாகச் செயல்படும் ஹாங்காங் காவல் துறையினருக்கு பிற நாடுகளிலும் நன்மதிப்பு உண்டு. ஆனால் காட்சிகள் மாறுகின்றனவோ என்று தோன்றுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு பெய்ஜிங் ஒரு வெள்ளை அறிக் கையை வெளியிட்டது. சீனத் தலைவர்களின் விருப்பம் தொடர்ந்தால் மட்டுமே ஹாங்காங் கில் சுயாட்சி தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? ஒரே அர்த்தம்தான் என்கிறார்கள் பெரும் பாலான ஹாங்காங் மக்கள். வருங் காலத்தில் தங்களது சுயாட்சி கேள்விக் குறியாகிவிடும்.

போதாக்குறைக்கு நீதித் துறைக்கு சீன அரசு கூறியிருக் கும் ஓர் ஆலோசனை ஹாங்காங் வாசிகளை பதற வைத்திருக்கிறது. ‘‘நீதித்துறை என்பது அரசின் ஒர் அங்கம்தான். எனவே நீதித் துறையிடம் தேசப்பற்று இருக்க வேண்டுமென்பதை இந்த அரசு எதிர்பார்க்கிறது’’. பொதுவாக இப் படிச் சொன்னாலே அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியும். அதுவும் சீன அரசு இப்படிச் சொல்கிறது என்றால் அது ஹாங்காங்கை மனதில் வைத்துதான் என்பது தெளிவு. இதுபற்றி ஹாங்காங்கில் உள்ள போராட்டக்காரர்கள் விளக் கம் கேட்க, சீன அரசு மெளனம் காக்கிறது.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x