Published : 18 Nov 2014 11:03 AM
Last Updated : 18 Nov 2014 11:03 AM
அமெரிக்க வெளியுறவுத் துறை கணினி வலையமைவுகளில், வகைப்படுத்தப்படாத மின்னஞ்சல்கள் அந்நியர்களால் சட்ட விரோதமாக ஊடுருவப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து அக்குறிப்பிட்ட வலையமைவுகளை (நெட்வொர்க்) வெளியுறவுத்துறை நிறுத்தி வைத்துள்ளது. வெள்ளை மாளிகை, அமெரிக்க தபால் சேவைகள், தேசிய பருவநிலை சேவைகள் ஆகிய துறைகளின் கணினி வலையமைவுகளும் சட்ட விரோதமாக ஊடுருவப்பட்டுள்ளன.
இச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை. ஆனால், வகைப்படுத்தப்படாத மின்னஞ்சல் அமைப்புகளில் மட்டுமே ஊடுருவல் நடைபெற்றுள்ளது என்றும், வகைப்படுத்தப்பட்ட மின்னஞ்சலில் ஊடுருவல் முயற்சி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT