Last Updated : 02 Nov, 2014 01:05 PM

 

Published : 02 Nov 2014 01:05 PM
Last Updated : 02 Nov 2014 01:05 PM

இந்தியர் மீதான வழக்கு: ரகசிய விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு

ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்க இந்தியர் மீதான விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் முகமது ஹம்சா கான் (19). அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர், விமானம் மூலம் துருக்கி சென்று, அங்கிருந்து இராக் அல்லது சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பினருடன் இணைந்து செயல்பட முடிவு செய்தார். இதற்காக கடந்த அக்டோபர் 4-ம் தேதி சிகாகோவின் சர்வதேச விமான நிலையம் வந்த அவரை, மத்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

“இந்த வழக்கு விசாரணையில் 2 சிறுவர்கள் பங்கேற்க வேண்டியிருப்பதால், நீதிமன்ற விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும். வழக்கு நடைபெறும் போது, அதை பார்வையிட பொதுமக்களுக்கோ, பத்திரிகையாளர் களுக்கோ அனுமதி அளிக்கக் கூடாது” என்று அரசு தரப்பு வழக்க றிஞர் வாதிட்டார். இக்கோரிக்கையை மாஜிஸ் திரேட் சூசன் கோக்ஸ் ஏற்க மறுத்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x