Published : 23 Oct 2013 08:35 AM
Last Updated : 23 Oct 2013 08:35 AM

சீன பிரதமருடன் ஆலோசனையை தொடங்கினார் மன்மோகன் சிங்

சீனா சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், சீனப் பிரதமர் லீ கெகியாங்கை, சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அருணாச்சல எல்லைப் பகுதியில் இந்திய - சீன இடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து அலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

இரு நாட்டுத் தலைவர்களும் எல்லைப் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என தெரிகிறது.

முன்னதாக சீன அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னை சிக்கலானது; உணர்வுபூர்வமானதும் கூட. இப்பிரச்னை தீர்க்கப்பட சிறிது காலமாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x