Last Updated : 19 Apr, 2017 02:51 PM

 

Published : 19 Apr 2017 02:51 PM
Last Updated : 19 Apr 2017 02:51 PM

தலாய் லாமா வருகை எதிரொலி: அருணாச்சலப் பிரதேசத்தில் 6 இடங்களில் பெயர்களை மாற்றி சீனா அதிரடி

அருணாச்சலப்பிரதேசத்துக்கு சர்ச்சைக்குரிய பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா வருகை தந்ததற்கு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் 6 இடங்களை சீனப் பெயரைப் பொறித்துள்ளது சீன அரசு.

இது குறித்து சீன அரசிதழ் குளோபல் டைம்ஸ் குறிப்பிட்ட போது அருணாச்சலப் பிரதேசம் அதாவது சீனா பாணியில் அழைக்க வேண்டுமெனில் தெற்கு திபெத் பகுதியில் 6 இடங்களின் பெயர்களை வோகியாய்ன்லிங் மிலா ரி, குவாய்டெங்கார்போ ரி, மயின்கியுகா, பியுமோ, மற்றும் நம்காபப் ரி என்று மாற்றியுள்ளது.

“இந்தப் பெயர் மாற்றங்கள் சீனாவின் இறையாண்மையை மறு உறுதி செய்யும் நடவடிக்கையாகும்” என்று பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் இனக்குழு ஆய்வுத்துறை பேராசிரியர் சியாங் குன்சின் தெரிவித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பன்னாட்டு ஆய்வுத்துறையைச் சேர்ந்த லியு ஸோங்யி கூறும்போது, “தலாய்லாமா வருகை விவகாரம் இன்னமும் முடிந்துவிடவில்லை. இந்த விவகாரத்தை முடிக்க நாங்கள் விரும்பவில்லை” என்றார்.

ஏற்கெனவே தலாய் லாமா வருகையில் இந்திய-சீன உறவுகளில் கடும் சேதம் ஏற்படும் என்று சீனா எச்சரித்திருந்தது. தலாய்லாமாவை ஊக்குவிப்பதன் மூலம் ஒரே சீனா கொள்கையை இந்தியா கேள்விக்குட்படுத்துவதாகிறது.

இந்திய உள்நாட்டு விவகாரத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருமுறை கூறும்போது, “தலாய்லாமா வருகைக்கு சீனா ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது” என்று கூறியிருந்தார்.

அதனை மேற்கோள் காட்டிய குளோபல் டைம்ஸ் செய்தி, “பெய்ஜிங்கின் வார்த்தைகளைக் கடன் வாங்கி எங்களுக்கே தெரிவிப்பது மூலம் ரிஜிஜு தன்னை சாமர்த்தியசாலியாக நினைத்துக் கொண்டுள்ளார். ஆனால் இங்கு அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன, தய்வான் போல் சீனாவின் எந்த ஒரு பகுதியும், குறிப்பாக திபெத்தும் சீனாவுடன் சேர்ந்ததே. இதனை புதுடெல்லி ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்” என்று கூறியுள்ளது.

ராய்ட்டர்ஸ் நேர்காணலில் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காந்து கூறும்போது, “எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரை நானும் அருணாச்சலப்பிரதேசம் தன் எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளவில்லை, திபெத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது என்றே கூறிவருகிறேன்” என்றார்.

இந்நிலையில் இந்த வாக்குவாதங்களுக்கிடையே சீனா அருணாச்சலப்பிரதேசத்தில் தனது லிபியில் 6 இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x