Last Updated : 25 Jun, 2017 02:23 PM

 

Published : 25 Jun 2017 02:23 PM
Last Updated : 25 Jun 2017 02:23 PM

இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து நவம்பரில் மீண்டும் பரிசீலனை: அணுசக்தி தொழில்நுட்ப விநியோக நாடுகள் குழு தகவல்

இந்தியாவை உறுப்பினராக சேர்ப் பது குறித்து வரும் நவம்பர் மாதம் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று அணுசக்தி தொழில்நுட்பம், மூலப்பொருள் விநியோக நாடுகள் குழு (என்எஸ்ஜி) தெரிவித்துள்ளது.

என்எஸ்ஜி உறுப்பு நாடு களின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு என்எஸ்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்எஸ்ஜியில் சேர்க்கக்கோரி இந்தியா மற்றும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இதர நாடுகள் கொடுத்துள்ள விண்ணப்பம் தொடர்பான தொழில்நுட்ப, சட்ட மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குறிப்பாக, இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு அறிக் கையை (2008) அமல்படுத்துவது குறித்தும் என்எஸ்ஜி உடனான இந்தியாவின் உறவு குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. எனினும், இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது குறித்து வரும் நவம்பர் மாதம் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2008-ல் இந்தியா, அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க அணுசக்தி ஒத்து ழைப்பு ஒப்பந்தம் கையெழுத் தானது. இதற்கு ஏதுவாக ஆக்கப் பூர்வ நோக்கத்துக்கான அணுசக்தி வர்த்தகம் தொடர்பாக பின்பற்றும் சட்ட விதிகளை தளர்த்திக் கொள்வதாக என்எஸ்ஜி ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

என்எஸ்ஜியில் 48 நாடுகள் உறுப்பினராக உள்ளன. அணு மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அணு ஆயுத தயாரிப்புக்காக ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்த அமைப்பில் சேர இந்தியா விரும்புகிறது.

ஆனால் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்த் துக்கொள்ள சீனா ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த ஆண்டுக் கான கூட்டம் நடைபெற இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என சீனா ஒரு வாரத்துக்கு முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x