Published : 29 Nov 2014 01:17 PM
Last Updated : 29 Nov 2014 01:17 PM
படகு சேதமடைந்ததால் நடுக்கடலில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினர் மீட்டனர்.
இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுலசூரிய இத்தகவகலை தெரிவித்துள்ளார். நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) ரோந்த்துப் பனியில் ஈடுபட்டிருந்தபோது, நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும் அவர்களை மீட்டு யாழ்ப்பாணம் கொண்டு சென்றதாகவும் கூறினார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு அண்மையில் இலங்கை அதிபர் ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT