

முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் இருந்து, பாக். ராணுவத்தின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. வானில் மேலெழும்பி பறந்தவுடன், அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 21 பேரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.