Last Updated : 20 Sep, 2016 01:01 PM

 

Published : 20 Sep 2016 01:01 PM
Last Updated : 20 Sep 2016 01:01 PM

இந்தியா - பாக். பிரச்சினை: யுஎஸ் தலையீடு கோரும் நவாஸ்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையைத் தீர்க்க அமெரிக்கா உதவ வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஐ.நா. பொது சபையின் 71-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில் நவாஸ் ஷெரீப், "தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்படுவதை பாகிஸ்தான் தனது தார்மிக கடமையாகக் கொண்டுள்ளது. எனக்கு நன்கு நினைவுள்ளது, இதற்கு முன்னர் அமெரிக்காவின் அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பிரச்சினைக்கு தீர்வு காண உதவினார்.

அமெரிக்க அரசும், அமெரிக்க வெளியுறவு அமைச்சரும் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினையைத் தீர்க்க உதவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் புதன்கிழமை ஐ.நா. பொது சபையில் பேசுகிறார். அப்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப அவர் திட்டமிட்டுள்ளார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x