Published : 25 Apr 2017 10:25 AM
Last Updated : 25 Apr 2017 10:25 AM
அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்களில் சிரியாவில் இதுவரை 7,631 பேர் பலியாகி உள்ளனர்.
இதுதொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த போர் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியாவில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது 2014 செப்டம்பர் 23-ம் தேதி அமெரிக்க கூட்டுப்படை வான் வழித் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதில் இதுவரை 5,961 ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பாவி பொதுமக்களில் 1256 பேர் இறந்துள்ளனர். அவர்களில் 275 பேர் குழந்தைகள், 184 பேர் பெண்கள். பல்வேறு தாக்குதல்களில் சிரியா ராணுவத்தைச் சேர்ந்த 98 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 7,631 பேர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT