சீனாவில் நிலச்சரிவு: 141 பேர் மாயம்

சீனாவில் நிலச்சரிவு: 141 பேர் மாயம்
Updated on
1 min read

சீனாவில் சிச்சுவான் மாகாணத்திற்கு அருகே உள்ள சின்மோ கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 141 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம் தரப்பில், "மலைப் பிரதேச பகுதியான மக்ஸியன் கவுண்டியிலுள்ள சின்மோ கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியிலிருந்த 46 வீடுகளும் மண்ணில் புதைந்தன. இதில் அதிலிருந்த 141 பேரும் மாயமாகியுள்ளனர். மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளுமாறு மீட்பு பணி குழுவினருக்கு சீன பிரதமர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in