Last Updated : 24 Jun, 2016 07:38 AM

 

Published : 24 Jun 2016 07:38 AM
Last Updated : 24 Jun 2016 07:38 AM

இந்தியாவுக்கு ஆதரவு கிடைப்பதில் இழுபறி: என்எஸ்ஜியில் இடம் கிடைக்குமா?

சியோல் கூட்டத்தில் இன்று முடிவு தெரியும்

அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்ப்பது தொடர்பாக சியோலில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடிக்கிறது. இதுபற்றிய இறுதி முடிவு இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்எஸ்ஜியில் புதிய உறுப்பினராக சேர இந்தியாவும் பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இந்தியா வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எனினும், இந்தியா போன்ற அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை சேர்க்க சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரம் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளித்து உறுப்பினராக சேர்த்தால் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது. ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால்கூட புதிய உறுப்பினரை சேர்க்க முடியாது.

இந்நிலையில், என்எஸ்ஜியின் வருடாந்திர கூட்டம் சியோல் நகரில் நேற்று தொடங்கியது. இதையடுத்து, மத்திய வெளியு றவுத் துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர் சியோலில் முகாமிட் டுள்ளனர். இந்தியா உறுப்பினர் இல்லை என்பதால் இவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது.

இந்தக் கூட்டதில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (என்பிடி) கையெழுத்திடாத இந்தியா உள்ளிட்ட நாடுகளை என்எஸ்ஜியில் சேர்ப்பது தொடர் பான ஆலோசனை, நிகழ்ச்சிநிரலில் இல்லை.

எனினும், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த விவகாரத்தை எழுப்பியதாகத் தெரிகிறது. இதை யடுத்து, இந்தியாவின் கோரிக்கை உள்ளிட்ட பட்டியலிடப்படாத பல விஷயங்கள் குறித்து நேற்று நடந்த சிறப்பு கூட் டத்தில் பரிசீலிக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, என்பிடியில் கையெழுத்திடாத இந்தியா உள்ளிட்ட நாடுகளை என்எஸ்ஜி யில் சேர்க்க, சீனா, பிரேசில், ஆஸ்திரியா, நியூசிலாந்து, துருக்கி மற்றும் அயர் லாந்து ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஒரு மித்த கருத்து எட்டப்படவில்லை.

எனினும், தொடர்ந்து இன்றும் கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தின் முடிவில்தான் இறுதி நிலவரம் தெரியவரும்.

முன்னதாக, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பி னராவதற்கு ஆதரவளிக்குமாறு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரத மர் நரேந்திர மோடி நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில், ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங் கிய து. இதில் பங்கேற்பதற்காக பிரத மர் நரேந்திர மோடி நேற்று காலை தாஷ்கண்ட் சென்றடைந் தார்.

இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்துப் பேசினார். என்எஸ்ஜி யில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, “இரு தலைவர்களும் என்எஸ்ஜி விவகாரம் குறித்து விரிவாக விவா தித்தனர். குறிப்பாக, என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்க்கக் கோரி இந்தியா விண்ணப்பித்துள்ளது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சியோலில் நடைபெறும் என்எஸ்ஜி உறுப்பு நாடுகள் கூட்டத்தில் இதுபற்றி பரிசீலிக்கும்போது சீனாவும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x