Published : 07 Nov 2014 02:54 PM
Last Updated : 07 Nov 2014 02:54 PM

இந்தியாவின் எழுச்சிக்காக ராஜ்நாத் சிங் பிரார்த்தனை

ஜெருசலேம் புனித நகரில் உள்ள யூதர்கள் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் எழுச்சிக்காக பிரார்த்தனை செய்ததாத அங்கு வைக்கப்பட்டிருந்த பிரார்த்தனை குறிப்பேட்டில் பதிவு செய்தார்.

இஸ்ரேல் சென்றுள்ள ராஜ்நாத் சிங், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை சந்தித்து பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக விரிவாக ஆலோசித்தார்.

பின்னர், ஜெருசலேம் புனித நகரில் உள்ள யூதர்கள் வழிபாட்டுத் தலத்திற்குச் சென்ற அவர், உலக அரங்கில் இந்தியா எழுச்சி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார். ராஜ்நாத் சிங், பிரார்த்தனை செய்த பிறகு அந்த குறிப்பேட்டில் தனது பிரார்த்தனையை எழுதிய வேறு ஒருவர், ராஜ்நாத் இந்தியில் இந்தியா எழுச்சி பெற வேண்டும் என எழுதியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ராஜ்நாத் சிங்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x