Published : 20 Jan 2016 09:32 AM
Last Updated : 20 Jan 2016 09:32 AM

கொலை செய்ததை பேஸ்புக்கில் கூறி சிக்கிய பெண்

தனது காதலரை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண், அதனை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை போலீஸார் கைது செய் தனர்.

கலிபோர்னியாவின் ஹேமெட் நகரைச் சேர்ந்தவர் நகசியா ஜேம்ஸ்(18). இவர் டோரியன் பவெல் (21) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அண்மையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது. அப்போது, நகசியா, பவெலை கத்தியால் குத்தி கொலை செய்தார். கடந்த 11-ம் தேதி பவெல் கொலை செய்யப்பட்ட தகவல் போலீஸாருக்கு தெரிய வந்தது.

இதனிடையே தான் கொலை செய்தது தொடர்பாக நகசியா ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

அதில், “நான் கத்தியை எடுத்தேன், பின் அவரைக் குத்தி னேன். அவரைக் காயப்படுத்த வேண்டும் என நினைக்க வில்லை. ஆனால், அவர் இறந்து விட்டார். நான் ஓடிவிட்டேன் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் மறைந் திருந்த நகசியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x