Published : 17 Jun 2016 10:32 AM
Last Updated : 17 Jun 2016 10:32 AM
வங்கதேசத்தில் தொடர்ந்து பிரசங்கம் செய்தால் கொன்று விடுவோம் என்று ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த இந்து பூசாரிக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து டாக்காவில் உள்ள வாரி காவல் நிலைய அதிகாரி நேற்று கூறியதாவது:
ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஒரு பூசாரி தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக புகார் செய்தார். ஐஎஸ் அமைப்பின் லெட்டர்ஹெட்டில் கணினியில் அச்சிடப்பட்டிருந்த அந்தக் கடிதத்தை ஏபி சித்திக்கி என்பவர் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், “வங்கதேசம் ஒரு முஸ்லிம் நாடு. உங்கள் மதத்தைப் பற்றி இங்கு பிரசங்கம் செய்யக்கூடாது. தொடர்ந்து பிரசங்கம் செய்தால் 20-ம் தேதி முதல் 30-ம் தேதிக்குள் (மாதம் குறிப்பிடவில்லை) கத்தியால் குத்திக் கொலை செய்து விடுவோம்” என கூறப்பட்டிருந்தது. எனவே, அந்த மடத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நசிமுதின் அரசு பல்கலைக்கழக கல்லூரியில் பணியாற்றும் ஒரு இந்து விரிவுரையாளர் (கணிதம்) மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் 4 இந்துக்கள் பலியாகி உள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கு தலை நடத்தி வருவதாகக் கூறப் படுகிறது. இதை மறுத்துள்ள அந்நாட்டு அரசு, வங்கதேச தேசியவாத கட்சியுடன் தொடர்பு டைய தீவிரவாதிகளே இதற்குக் காரணம் என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT