Last Updated : 06 Jul, 2015 03:28 PM

 

Published : 06 Jul 2015 03:28 PM
Last Updated : 06 Jul 2015 03:28 PM

ஐஎஸ் போராளிகளை மணந்த காணாமல்போன இங்கிலாந்து பள்ளிச் சிறுமிகள்

இங்கிலாந்திலிருந்து மாயமான இரண்டு சிறுமிகள் ஐ.எஸ். இயக்கத்தினரை திருமணம் செய்து வாழ்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் பள்ளியில் படித்து வந்த 15 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுமிகள் திடீரென சில மாதங்களுக்கு முன்னர் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டனர். இதனை அடுத்து அவர்களது நெருங்கிய தோழிகள் 4 பேரை சந்தேகத்தின்பேரில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து அரசுத் தடை விதித்தது.

இந்த நிலையில், காணாமல் போன சிறுமிகள் லண்டனில் வாழும் தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, "ஐ.எஸ் இயக்கத்தின் மரபுப்படி அந்த போராளிகளை திருமணம் செய்து சிரியாவின் ரப்பா நகரில் வாழ்கிறோம்" என்று என்று கூறியதாக லண்டன் பத்திரிகை தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சிறுமிகளின் பெயர்களை பத்திரிகை குறிப்பிடவில்லை. இந்தத் தகவல் லண்டன்வாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x