Published : 05 Jun 2016 01:24 PM
Last Updated : 05 Jun 2016 01:24 PM
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பலமுனை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க கூட்டுப் படைகள், ரஷ்ய விமானப் படை ஆகியவை தனித்தனியே வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
தரைமார்க்கத்தில் இராக் ராணுவம், சிரியா அதிபர் ஆசாத்தின் படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றன. இதே போல அமெரிக்க ராணுவ உதவியுடன் குர்து படை வீரர்களும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நெருக்குதல் அளித்து வருகின்றனர். பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்வதால் சிரியா, இராக்கில் அந்த அமைப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
சிரியாவின் ராக்கா மாகாணத்தை நோக்கி ஆசாத் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. ஆசாத் படைகளுக்கு பக்கபலமாக ரஷ்ய விமானப் படை அந்தப் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது ராக்காவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் முகாமிட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT