Published : 01 Oct 2013 04:28 PM
Last Updated : 01 Oct 2013 04:28 PM

வடக்குப் பகுதியில் ராணுவம் வாபஸ் இல்லை: ராஜபக்‌ஷே

வடக்கு மாகாணப் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “வடக்கு மாகாணத்திலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற முடியாது. வடக்கிலிருந்து ராணுவத்தை வாபஸ் பெற்ற பின், அதே போன்ற கோரிக்கைகளை மற்ற மாகாணங்களும் முன்வைத்தால் என்ன செய்வது? பிறகு, ராணுவ முகாம்களை நாட்டின் எந்தப் பகுதியில் நான் அமைப்பது?

விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான உள்நாட்டுப் போர், 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், வடகிழக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ராணுவப் படை அணிகள் நிறுத்தப்பட்டிருப்பதை சர்வதேச நாடுகள் விமர்சித்து வருகின்றன.

அதோடு, அந்தப் பகுதிகளில் சிவில் நிர்வாகத்தில் ராணுவம் தலையிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, அப்பகுதியில் ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முழுமையாக இல்லாவிட்டாலும், ராணுவத்தின் ஒரு பகுதியையாவது, வடக்கிலிருந்து வாபஸ் பெறலாமே என்று வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x