

ஆப்கானிஸ்தானில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானின் நங்கஹர் மாகாணத்தில் சாலையோரம் சென்ற காரை நோக்கி மர்ம நபர் சரமாரியாக துப்பக்கிச் சூடு நடத்தினார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்த கொடூர தாக்குதலை நடத்திய மர்ம நபர் குறித்த தகவல் வெளியாகவில்லை என்று உள்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.