வங்கதேசத்தில் நிலச்சரிவு: 26 பேர் பலி

வங்கதேசத்தில் நிலச்சரிவு: 26  பேர் பலி
Updated on
1 min read

வங்கதேசத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலியாகினர்.

இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வங்கதேச போலீஸார் தரப்பில், "வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ந்து வருகிறது. இதில் அங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதில் ரங்காமத் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மீட்புப் பணி வீரர்கள் உட்பட 21 பேர் பலியாகினர். பந்தர்மன் மாவட்டத்தில் 5 பேர் பலியாகினர்" என்று கூறப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என்று வங்கதேச தேசிய பேரிடர் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in