Published : 22 Aug 2016 03:46 PM
Last Updated : 22 Aug 2016 03:46 PM
ரஷ்யாவின் கைப்பாவையாகவே டொனால்டு டிரம்ப் செயல்படுகிறார் என ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சார மேலாளர் ராபி மோக் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஏபிசி தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
"ரஷ்யாவின் கிரெம்ளின் பகுதியிலிருந்து சிலர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்துக்கு வேலை செய்து வருகின்றனர். இதிலிருந்து ரஷ்யா டொனால்டு டிரம்புக்கு ஆதரவளிப்பது தெளிவாக விளங்குகிறது.
ஆனால் தற்போது நமக்கு தெரிய வேண்டியது கிரெம்ளினிலிருந்து உதவுவது யார் என்பதை டிரம்ப் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
டிரம்ப் ரஷ்யாவின் கைப்பாவையாக செயல்படுகிறார். ரஷ்ய அதிபர் புதினின் கருத்துகளை டொனால்டு டிரம்ப் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.
டிரம்பின் ஆலோசகர்கள் சிலர் ரஷ்ய நிறுவனங்களுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ளனர். மேலும் கடந்த சில வாரங்களாக டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் ரஷ்யாவின் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கில்தான் அமைந்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT